search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்ரீம் கோர்ட்"

    • அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் கவர்னரின் நடவடிக்கையை பார்த்து சுப்ரீம் கோர்ட் ஏன் கண்ணை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
    • பொன்முடியின் தண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்த பிறகு அவர் குற்றவாளியா? இல்லையா? என கவர்னர் எங்களுக்கு பாடம் நடத்த முடியாது.

    சென்னை:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடிக்கு சென்னை ஐகோர்ட் கடந்த டிசம்பர் மாதம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததுடன் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.

    இந்த வழக்கில் பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இதில் அவருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 11-ந்தேதி நிறுத்தி வைத்தது.

    இதனால் பொன்முடி திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தொடரலாம் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆனதை தொடர்ந்து அவரை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் கவர்னர் ஆர்.என்.ரவி அதை பொருட்படுத்தவில்லை.

    பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர அவர் நிரபராதி என்று கோர்ட்டு கூறவில்லை என்பதால் பொன்முடியை அமைச்சராக்குவது சரியாக இருக்காது என்று தமிழக அரசுக்கு கவர்னர் கடிதம் எழுதி விட்டார்.

    கவர்னரின் இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனுசிங்வி, பி.வில்சன் ஆகியோர் ஆஜரானார்கள். கவர்னர் தரப்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஆஜரானார்.

    தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக கவர்னரின் செயல்பாடு தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, கவர்னர் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாக அப்போது கண்டனம் தெரிவித்தார்.

    குற்றவாளி என்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்த பிறகு பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைப்பது அரசியல் அமைப்புக்கு எதிரானது என கவர்னர் எப்படி கூற முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் கவர்னரின் நடவடிக்கையை பார்த்து சுப்ரீம் கோர்ட் ஏன் கண்ணை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    அப்போது அட்டர்னி ஜெனரலிடம் தலைமை நீதிபதி கூறும்போது, கவர்னரிடம் இருந்து சாதகமான தகவல் கிடைக்கப்பெறாவிட்டால், அரசமைப்பு சட்டத்தின்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிடும். ஆனால் அந்த சூழலை தவிர்க்க விரும்புகிறோம்.

    எனவே கவர்னருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இன்று (நேற்று) அவகாசத்தை அளித்து அரசியலமைப்பு சட்டத்தை நிலை நிறுத்த விரும்புகிறோம். எனவே கவர்னர் இவ்வாறு நடந்து கொள்வது முறையல்ல. அவர் சுப்ரீம் கோர்ட்டை அவமதித்துள்ளார். பொன்முடியின் தண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்த பிறகு அவர் குற்றவாளியா? இல்லையா? என கவர்னர் எங்களுக்கு பாடம் நடத்த முடியாது.

    எனவே கவர்னருக்கு இன்று (நேற்று) இரவு முழுவதும் காலக்கெடு விதிக்கிறோம். இல்லையென்றால் நாளை (இன்று) தீர்ப்பு அளிக்கிறோம் என்று தலைமை நீதிபதி கூறினார்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கவர்னர் தரப்பில் இருந்து நேற்று முதல் எந்த அழைப்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவில்லை.


    இந்நிலையில், இன்று பிற்பகலில் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். பதவி ஏற்க வருமாறு கவர்னர் ஆர்.என். ரவி அழைத்து விடுத்துள்ளார். இதையடுத்து இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பொன்முடி அமைச்சராக பதவியேற்கிறார்.

    சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு சற்று நேரத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் கவர்னர் அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
    • பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவசரமாக குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவசரமாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான இச்சட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 237 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (DYFI), காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ், திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி ஆகியோர் ஆகியோரின் மனுக்களும் அடங்கும்.

    இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (CAA) தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஏப்ரல் 8-ம் தேதிக்குள் ஒன்றிய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.

    இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.
    • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

    இதைதொடர்ந்து, பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க முடிவு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கவர்னர் ஆர்.என்.ரவி, இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கவில்லை.

    இந்நிலையில், பொன்முடி அமைச்சர் பதவி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

    முதலமைச்சரின் பரிந்துரைப்படி பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மனுவை உடனடியாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

    இதுகுறித்து திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறியதாவது:-

    முன்னாள் அமைச்சர் பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளது.

    ஆளுநர் தனியாக ஒரு அரசை நடத்த முயற்சி செய்கிறார்.

    ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
    • பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை.

    புதுடெல்லி:

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

    இதன் காரணமாக திருக்கோவிலூர் தொகுதி காலியிடம் என்று தேர்தல் கமிஷனில் அறிவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்பட்டு விட்டது.

    பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முடிவு செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கவர்னர் ஆர்.என்.ரவி, இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கவில்லை.

    இந்நிலையில் பொன்முடி அமைச்சர் பதவி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

    முதலமைச்சரின் பரிந்துரைப்படி பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மனுவை உடனடியாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

    பொன்முடி பதவி ஏற்பு விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக, அமைச்சராக நியமிக்கப்படுபவரின் தகுதிப்பாடு குறித்த முதலமைச்சரின் மதிப்பீட்டை கவர்னர் கேள்வி எழுப்ப முடியாது என்றும் தமிழக அரசுடன் கவர்னர் கடைப்பிடிக்கும் மோதல் போக்கு கொஞ்சமும் வியப்பளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

    • குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம்.
    • பாராளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் சிஏஏ சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

    2014, டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

    இதற்கிடையே, குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம். சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.

    இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது.

    • 2 தேர்தல் ஆணையர்கள் நேற்று நியமிக்கப்பட்டார்கள்.
    • தேர்தல் ஆணைய நியமன புதிய சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு டிசம்பரில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், மூத்த மந்திரி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு பரிந்துரையின்படி தேர்தல் கமிஷனர்கள் நியமிக்கப்படுகிறார்கள். காலியாக உள்ள 2 தேர்தல் ஆணையர்கள் நேற்று நியமிக்கப்பட்டார்கள்.

    தேர்தல் ஆணைய நியமன புதிய சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு புதிய தேர்தல் ஆணையர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தது. இந்த வழக்கின் விசாரணை வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது.

    • குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
    • குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு தடை கோரிய மனுக்களை வருகிற 19-ந்தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.

    புதுடெல்லி:

    குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல், இன்று தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, சி.ஏ.ஏ.வுக்கு எதிரான மனுக்களை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

    அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மனுதாக்கல் செய்தவர்களுக்கு தார்மீக பொறுப்பு கிடையாது என்றும் இந்த வழக்குகளை விசாரிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு தடை கோரிய மனுக்களை வருகிற 19-ந்தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.

    • நாம் தமிழர் கட்சி தொடர்ந்து கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
    • ஹோலி விடுமுறைக்கு பிறகு வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அந்த கட்சி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

    அப்போது நாம் தமிழர் கட்சி சார்பில் விவசாயி சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த கட்சி சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

    நாம் தமிழர் கட்சி தொடர்ந்து கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

    இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஹோலி விடுமுறைக்கு பிறகு வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

    • சட்டசபை செயலகமும் பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த திருக்கோவிலூர் தொகுதியை காலியிடமாக அரசிதழில் வெளியிட்டது.
    • ராகுல் காந்தி விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதே போல் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

    சென்னை:

    உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டிருந்த வழக்கில் விழுப்புரம் சிறப்பு கோர்ட்டு பொன்முடியையும், அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்து 2016-ம் ஆண்டு தீர்ப்பு கூறி இருந்தது.

    இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு மறுபடியும் விசாரித்து சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து அதன் பிறகு பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.

    இதனால் பொன்முடி அமைச்சர் பதவியையும் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.

    சட்டசபை செயலகமும் பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த திருக்கோவிலூர் தொகுதியை காலியிடமாக அரசிதழில் வெளியிட்டது.


    இந்த நிலையில் பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில், குற்றவாளி என தீர்மானித்த ஐகோர்ட்டின் உத்தரவை நிறுத்தி வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். அவரது தண்டனைக்கு தடையும் விதிக்கப்பட்டது.


    இந்த தீர்ப்பு வந்த நாளில் இருந்து பொன்முடி மறுபடியும் எம்.எல்.ஏ.ஆகி விட்டதாகவும், ராகுல்காந்தி விஷயத்தில் கடைபிடிக்கப்பட்டது பொன்முடிக்கும் பொருந்தும் என்று தி.மு.க. வழக்கறிஞர் வில்சன் எம்.பி. கருத்து தெரிவித்தார்.

    சபாநாயகர் அப்பாவு கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் ராகுல் காந்தி விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதே போல் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில் தீர்ப்பின் நகல் வெளியானது. இதனால் பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார்.

    மேலும், தீர்ப்பு நகல் சட்டப்பேரவை செயலாளரிடம் கிடைத்தவுடன் திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்ப பெறப்படும்.

    • குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
    • பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    புதுடெல்லி:

    கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

    இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

    இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டது. இத்துடன் இந்த சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

    குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடுத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் விதிகள் மதிப்புமிக்க உரிமைகள் உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட சில மதங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படுகிறது. அவசர கதியில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது. எனவே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததால் அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இப்போது அவருடைய தண்டனைக்கு தடை விதித்துள்ளது.
    • கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கல்வியில் வளர்ச்சி அடைந்ததற்கு வெள்ளைக்காரர்களே காரணம்.

    நெல்லை:

    தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் சட்டப்பேரவை உறுப்பினராக நீடிக்க முடியாது என உத்தரவிடப்பட்டது.

    அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததால் அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இப்போது அவருடைய தண்டனைக்கு தடை விதித்துள்ளது. எனவே அவருக்கு மீண்டும் எம்.எல்.ஏ. வாய்ப்பு வழங்குவது தொடர்பாக வயநாடு எம்.பி. ராகுல் காந்தி, லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசல், காசிப்பூர் மக்களவை உறுப்பினர் அன்சாரி ஆகியோரின் விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அதே நடவடிக்கை பொன்முடி விவகாரத்திலும் பரிசீலிக்கப்படும்.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு எங்களுடைய சட்டப்பேரவை முதன்மைச் செயலாளருடன் கலந்து ஆலோசித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அதை நீங்கள் விரைவில் பார்க்கலாம்.

    கால்டுவெல், ஜி. யு.போப் பற்றி கூறியபோது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் வெள்ளைக்காரர்கள் தான் இந்திய கலாசாரத்தை அழித்தார்கள் என்று பேசினார். அதேபோல் பலரும் பேசி வருகிறார்கள்.

    பிரிட்டிஷ்காரர்களின் வருகைக்கு முன்பு இந்திய கலாசாரம் எப்படி இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அப்போது உயர் ஜாதியினர் மட்டுமே படிக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம். இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம். அவர்கள் தான் சொத்து வாங்க முடியும் என்ற நிலை இருந்தது.

    ஆனால் வெள்ளைக்காரர்களான கால்டுவெல், ஜி. யு.போப் போன்றவர்கள் வந்த பிறகுதான் எல்லோரும் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டது. அவர்கள் மத போதகர்களாக வந்தாலும், அதைத்தாண்டி இந்திய, தமிழக கலாசாரத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்கள்.

    தமிழர்கள், இந்தியர்களுக்கு இலவச கல்வி கொடுத்தார்கள். நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கல்வியில் வளர்ச்சி அடைந்ததற்கு வெள்ளைக்காரர்களே காரணம். உயர் ஜாதியினர் மட்டுமே கல்வி கற்கும் முறையை மாற்றியவர்கள் வெள்ளைக்காரர்கள் தான். கால்டுவெல்லை அங்குள்ள 90 சதவீத மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஷேக் ஷாஜகான் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இந்த விவகாரத்தை கொல்கத்தா ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்து வந்தவர் ஷேக் ஷாஜகான்.

    இவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பொதுமக்களின் நிலங்களை அபகரித்ததாகவும், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதனால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த விவகாரத்தை கொல்கத்தா ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. பின்னர் ஷாஜகான் மற்றும் அவரது உதவியாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஷேக் ஷாஜகானுக்கு எதிராக அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.

    ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றபோது அவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவரை கைது செய்துள்ளதாக மேற்கு வங்காள போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு மேற்கு வங்காள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மாநில போலீசார் முற்றிலும் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள். எனவே வழக்கை சி.பி.ஐ. யிடம் ஒப்படைக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

    மேலும் ஷாஜகானின் காவலையும், வழக்கு தொடர்பான பொருட்களையும் மாலை 4.30 மணிக்குள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் மேற்கு வங்காள போலீஸ் தலைமை அலுவலகத்திற்குச் சென்று வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி ஷேக் ஷாஜகானை தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தினர்.

    ஆனால் மேற்கு வங்காள போலீசார் அவரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளதாகவும், அதன் தீர்ப்பு வரும் வரை ஷேக் ஷாஜகானை ஒப்படைக்க மாட்டோம் என தெரிவித்தனர். இதனால் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்காள அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் அவசர மனுவாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

    ×